Tuesday, May 22, 2012

Vamsa Vruddhi Kara Vamsa Kavacham - வம்ச வ்ருத்திகரம் வம்ச கவசம்

வம்ச வ்ருத்திகரம் வம்ச கவசம்

(இதை ஜபிப்பதால் புத்ர லாபமுண்டாகும். கர்ப்ப விச்சித்தி (அபார்ஷன்) ஏற்படும் ஸ்திரீகளும் இதை ஜபிப்பதால் உயிருடன் கூடிய நல்ல புத்ரர்களைப் பெறுவார்கள். பெண்களையே பெறுபவர்களுக்கும் புத்ர லாபம் உண்டாகும். ருதுவாகாத பெண்கள் இதை ஜபித்தால் ருது ஆவார்கள். புத்ர லாபத்தைக் கோரும் ஸ்திரீகள் ஒரு பாத்திரத்தில் தீர்த்தத்தை எதிரில் வைத்துக் கொண்டு இதில் சொல்லியபடி அங்கங்களைக் கையினால் தொட்டு ஏழு முறை இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து ஜலத்தையும் உட்கொள்ளவும். கர்பஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படும் ஸ்திரீகள் சாயங்காலத்தில் மேற்சொல்லியபடி ஏழு முறை ஜபித்து தீர்த்தத்தை சாப்பிட வேண்டும். இதனால் நிச்சயம் வம்சவிருத்தி உண்டாகும்.)

ஸ்ரீ கணேஸாய மந: பகவன் தேவதேவேஸ க்ருபயா த்வம் ஜகத்ப்ரபோ |
வம்ஸாக்ய கவசம் ப்ரூஹி மஹ்யம் ஸிஷ்யாயதேSனக              ||
யஸ்ய ப்ரபாவாத்தேவேஸ வம்ஸவ்ருத்திர்ஹி ஜாயதே               ||

தேவர்களுக்கு எல்லாம் தேவனும், குற்றமற்றவனும் உலகத்திற்குப் பிரபுவமான ஹே பகவானே! நீ தயவு செய்து சிஷ்யனான எனக்கு எதனுடைய மஹிமையால் வம்ச விருத்தி ஏற்படுமோ அத்தகைய வம்ச கவசத்தைச் சொல்.

ஸூர்ய உவாச -
ஸ்ருணு புத்ர ப்ரவக்ஷ்யாமி வம்ஸாக்யம் கவசம் ஸூபம்     
ஸந்தானவ்ருத்திர் யத் பாடாத் கர்ப்பரக்ஷா ஸதா ந்ருணாம்  

வந்த்யாபி லபதே புத்ரம் காகவந்த்யா ஸூதைர்யுதா          
ம்ருதவத்ஸா ஸபுத்ராஸ்யாத் ஸ்ரவத்கர்ப்பா ஸ்திரப்ரஜா     

அபுஷ்பா புஷ்பிணீ  யஸ்ய தாரணாச்ச ஸூகப்ரஸூ         
கன்யா ப்ரஜா புத்ரிணீஸ்யா தேதத் ஸ்தோத்ர ப்ரபாவத:             

பூதப்ரேதாதிஜா பாதா யா பாதா குல தோஷஜா             
க்ரஹ பாதா தேவ பாதா பாதா ஸத்ரு க்ருதா ச யா         

 
பஸ்மீபவந்தி ஸர்வாஸ்தா: கவசஸ்ய ப்ரபாவத:                       
ஸர்வே  ரோகா விநஸ்யந்தி ஸர்வே பாலாக்ரஹாஸ்ச யே

(ஸூர்யன் சொல்லுகிறார் :- ஹே புத்ரனே, எந்த ஸ்தோத்திரத்தைப் படித்தால் ஸந்தான வ்ருத்தியும் எப்பொழுதும் கர்ப்ப ரக்ஷையும் உண்டாகுமோ அத்தகைய மங்களமான வம்ச விருத்தியைக் கொடுக்கும் கவசத்தை சொல்லுகிறேன் கேள். இதைப் படிப்பதால் மலடியும் புத்ர பாக்யம் பெறுவாள். கர்ப்பத்திலேயே குழந்தை மரிக்கும் தன்மையுள்ள ஸ்திரீயும் உயிருடன் கூடிய பிள்ளையைப் பெறுவாள். கர்ப்பவிச்சித்தி (அபார்ஷன்)  உள்ளவளும் ஸ்திரமான ப்ரஜையை அடைவாள். மேலும் இதன் மஹிமையால் புஷ்பவதியாகாதவள் புஷ்பவதியாவாள். ஸூக ப்ரசவம் ஏற்படும். பெண்களையே பெற்றெடுப்பவள் புத்ரர்களையும் பெறுவாள். மற்றும் இதன் மஹிமையால் பூத ப்ரேதங்களால் ஏற்படும் கெடுதலும் குடும்பத்தில் பெரியோர்களால் ஏற்பட்ட தோஷமும், க்ரஹங்களாலும், தேவர்களாலும், சத்ருக்களாலும் ஏற்படும் பீடைகளும், எல்லா ரோகங்களும், பால க்ரஹங்களும் சாம்பலாகி விடுகின்றன.)

பூர்வே ரக்ஷது வாராஹீ சாக்னேய்யாமம்பிகா ஸ்வயம்
தக்ஷிணே சண்டிகா ரக்ஷேந் நைர்ருத்யாம் ஸவவாஹினீ

வாராஹீ பஸ்சிமே ரக்ஷேத் வாயவ்யாம் ச மஹேஸ்வரீ
உத்தரே வைஷ்ணவீ  ரக்ஷே தீஸானே ஸிம்ஹ வாஹினீ

ஊர்த்வம்து ஸாரதா ரக்ஷேததோ ரக்ஷது பார்வதீ
ஸாகம்பரீ ஸிரோ ரக்ஷேன்முகம் ரக்ஷது பைரவீ

கண்டம் ரக்ஷது சாமுண்டா ஹ்ருதயம் ரக்ஷதாச்சிதா
ஈஸானீச புஜௌ ரக்ஷேத்குக்ஷிம் நாபிம் ச காலிகா

அபர்ணாஹ்யுதரம் ரக்ஷேத்கடிம் பஸ்திம் ஸிவப்ரியா
ஊரு ரக்ஷது கௌமாரீ ஜயா ஜானுத்வயம் ததா

குல்பௌ பாதௌ ஸதா ரக்ஷேத் ப்ரஹ்மாணீ பரமேஸ்வரீ
ஸர்வாங்கானி ஸதா ரக்ஷேத் துர்கா துர்கார்த்தி நாஸினீ

(கிழக்கில் வாராஹியும், அக்னி திக்கில் அம்பிகையும், தெற்கில் சண்டிகையும், நிர்ருதி திக்கில் சவத்தை வாஹனமாகக் கொண்டவளும், மேற்கில் வாராஹியும், வாயு திக்கில் மஹேஸ்வரியும், வடக்கில் வைஷ்ணவியும், ஈசான திக்கில் ஸிம்ஹத்தை வாஹனமாகக் கொண்ட தேவியும், மேலே சாரதையும், கீழே பார்வதியும், சிரஸ்ஸை சாகம்பரியும், முகத்தை பைரவியும், கழுத்தை சாமுண்டையும், ஹ்ருதயத்தை சிவையும். புஜங்களை ஈசானியும், மார்பையும், நாபியையும், காலிகையும், வயிற்றை அபர்ணையும், இடுப்பையும், மூத்திர பையையும் சிவப்ரியையும், துடைகளை கௌமாரியும், முழங்கால் இரண்டையும் ஜயையும், கணுக்கால்களையும் கால்களையும் ப்ரஹ்மாணியான பரமேச்வரியும், எல்லா அங்கங்களையும் கடும் பீடைகளை நாசம் செய்பவளான  துர்க்கையும் எப்பொழுதும் காக்க வேண்டும்.)

நமோ தேவ்யை மஹாதேவ்யை  துர்காயை ஸததம் நம:
புத்ர ஸௌக்யம் தேஹி தேஹி கர்ப்பரக்ஷாம் குருஷ்வ ந:

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐம் ஐம் ஐம் மஹாகாளீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வதீ ரூபாயை நவகோடி மூர்த்யை துர்காயை நம: |
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாஸினி ஸந்தான ஸௌக்யம் தேஹி தேஹி வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் ச ஹரஹர கர்ப்பரக்ஷாம் குரு குரு ஸகலாம் பாதாம் குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம க்ருதாம்ச நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ ரக்ஷ கர்ப்பம் போஷய போஷய ஸர்வோபத்ரவம் சோஷய ஸ்வாஹா ||

அனேன கவசேனாங்கம் ஸப்தவாராபிமந்த்ரிதம்
ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத் கர்ப்பவதீ த்ருவம்

(மஹாதேவியான துர்க்கா தேவிக்கு எப்பொழுதும் நமஸ்காரம். புத்திர சௌக்யத்தைக் கொடு. கொடு. எங்களுக்குக் கர்ப்ப ரக்ஷையைச் செய்.  ஓம் ஹ்ரீம், ஹ்ரீம், ஹ்ரீம், ஸ்ரீம், ஸ்ரீம், ஸ்ரீம், ஐம், ஐம், ஐம், மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ ரூபியும், ஒன்பது கோடி மூர்த்தியாயுமுள்ள துர்க்கையின் பொருட்டு நமஸ்காரம். ஹ்ரீம், ஹ்ரீம், ஹ்ரீம், ஹே கடும் பீடையைப் போக்குபவளே, ஸந்தான ஸௌக்யத்தைக் கொடு கொடு. மலடியாயிருத்தலையும், குழந்தைகள் இறந்து போவதையும் போக்க வேண்டும். போக்க வேண்டும். கர்ப்ப ரக்ஷையைச் செய். செய். குலத்தில் உண்டானதும், வெளியில் உண்டானதும், பிறரால் செய்யப்பட்டதும் தன் கர்ம வசத்தால் ஏற்பட்டதுமான எல்லா விதமான பீடையையும் அழித்துவிடு. அழித்துவிடு. எல்லா சரீரங்களையும் காப்பாற்று. காப்பாற்று. கர்ப்பத்தை விருத்தி செய். விருத்தி செய். எல்லாவிதமான உபத்ரவத்தையும் போக்கிவிடு, போக்கிவிடு. இந்த கவசத்தை பஹிஷ்டையாயிருந்து ஸ்நானம் செய்த மறுதினம் முதல் "சாகம்பரீ சிரோரக்ஷேத்" என்று சொல்லப்பட்டபடி எதிரில் தீர்த்தத்தை வைத்துக் கொண்டு ஏழுமுறை அங்கங்களைத் தொட்டுக் கொண்டும், ஜபித்தும் தீர்த்தத்தை ப்ராசனம் செய்வதால் நிச்சயமாக கர்ப்பவதியாவாள்.)

கர்ப்பபாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
அனேன கவசேனாத மார்ஜிதாய நிஸாகமே

ஸர்வபாத வினிர்முக்தா கர்ப்பிணீ  ஸ்யாந்நஸம்ஸய:
அனேன கவசேனேஹ க்ரந்திதம் ரக்ததோரகம்

கடிதேஸே தாரயந்தீ ஸூபுத்ரஸூகபாகினீ
அஸூதபுத்ரமிந்த்ராணீ  ஜயந்தம் யத்ப்ரபாவத:

குருபதிஷ்டம் வம்ஸாக்யம் கவசம் ததிதம் ஸகே
குஹ்யாத் குஹ்யதரம் சேதம் ந ப்ரகாஸ்யம் ஹி ஸர்வத:
தாரணாத் படனாதஸ்ய வம்ஸச்சேதோ ந ஜாயதே
பாலாவினஸ்யந்தி பதந்தி கர்ப்பா ஸ்தத்ராபலா: கஷ்டயுதாஸ்ச வந்த்யா:
பாலக்ரஹைர் பூதகணைஸ்சரோகைர் ந யத்ர தர்மாசரணம் க்ருஹே ஸ்யாத்

(கர்ப்பம் கலைந்து விடும் என்று பய மேற்பட்ட போது, மேற்கண்ட தீர்த்தத்தைப் ப்ராசனம் செய்வதால் ஸ்திரமான கர்ப்பமுடையவளாவாள். ஸாயங்காலத்தில் இக்கவசத்தை ஜபித்து அங்கங்களை புரோக்ஷித்துக் கொண்ட கர்ப்பிணியானவள் எல்லாவித பாதைகளினின்றும் விடுபடுவாள்.  இதில் ஸந்தேஹமே இல்லை. இக்கவசத்தை முடியிட்ட சிகப்பு கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜபித்தால் ஸத்புத்ர ஸூகம் உடையவளாவாள். இதன் மஹிமையால் இந்த்ராணியானவள் ஜயந்தனென்ற புத்திரனை பெற்றெடுத்தாள். ஹே நண்பனே, ரஹஸ்யத்தினும், ரஹஸ்யமானதும் குருவினால் உபதேசிக்கப்பட்டதுமான வம்ச கவசத்தை எங்கும் வெளியிடக்கூடாது. இதைப் படிப்பதால் வம்சத்துக்கு அழிவு ஏற்படாது. எந்த வீட்டில் தர்மானுஷ்டானம் இல்லையோ அங்கு குழந்தைகள் இறக்கிறார்கள். கர்ப்பம் சிதறும். ஸ்திரீகள் மலடிகளாயும், பாலக்ரஹம், பூதகணம், ரோகம் முதலிய கஷ்டங்களால் பீடிக்கப்பட்டவர்களாயும் ஆகிறார்கள். இதனால் க்ருஹங்களில் எப்பொழுதும் நல்ல கார்யங்கள் நடக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.)

|| இதி ஸ்ரீ ஞானபாஸ்கரே வம்சவ்ருத்திகரம் வம்ச கவசம் ஸ்ம்பூர்ணம்  ||

No comments:

Post a Comment